சமையல் குறிப்புகள்

*கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப்பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

 *இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? உடனே சுடு தண்ணீரில் அரிசியை ஊற வைத்தால் 10 நிமிடத்தில் ஊறிவிடும்.

 *ஜவ்வரிசி (அ) அரிசிக் கூழ் கிளறும்போது, கசகசாவை ஒன்றிரண்டாக பொடித்து போட்டுக் கிளறி வடாம் (அ) வற்றல் போட்டால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் கிடைக்கும்.