உலக சிட்டு குருவிகள் தினம்

*சிட்டுக்குருவி*

கடலுக்குள் சிப்பிக்குள் மறைத்துவைத்த முத்துகளை இறைவன்
விண்ணுக்குள் சிறகுகளைத் தந்துப் பறக்கவிட்டான் சுதந்தரமாய்!
அவையே சிட்டுக்குருவிகள்!
தொட்டுப் பார்க்க ஆசைப்பட வைக்கும் மெத்தென்ற பட்டுடல்!அந்த பட்டான உடல்பறக்க 
துணைசெய்யும் மெல்லிய இரட்டை
இறக்கைகள்!
முல்லைப் பூவின் காம்புகளைக் கொண்டு இறைவன் படைத்தானோ எனவியக்க வைக்கும் கால்கள்!
துளித்துளி கண்கள்!ஆனாலும் அவை கூரம்புகள்!
குட்டியாய் அலகு!
அவைபோடும் கிரீச்கிரீச் ரீங்காரமோ மனதை மயக்கும் இசை!
கண்ணால் கண்டாலே பேரின்பம் தருகின்ற குருவியினம் இன்று அருகியுள்ளதை நினைத்தால் சோகம் பெருகுகிறதே!
குருவிகள் பெருக வழிவகைகள் ஏதாவது கண்டிப்பாய் அனைவரும் செய்யத்தான் வேண்டும்!

த.ஹேமாவதி
கோளூர்