கவிதை - வத்சலா

.                            


நினைவுகளின் அட்சயப்பாத்திரம்!
கல்லையும் பேசவைக்கும் மந்திரம்!
சோர்வுகொண்ட மனதுக்கு தன்னம்பிக்கை தரும் ஊக்கமருந்து !
சோம்பலின் சுயம் அழிக்கும்
சக்திவாய்ந்த நாகபாணம்!
கவியின் பொய்யான கற்பனைக்கு
பூவைத்து பொட்டிட்டு வரும் நங்கை!
உண்மையைக்கூர் தீட்டும்நேரம்
ஊக்கமாய் பாய்ந்து தீது கொல்லும் ராணுவவீரன்!
இன்பம் துன்பமெனும் இரட்டைச்
சிறகணிந்து சீராய்பறக்கும் கருடன்!
கோடிக்கு பணியாது நேர்மையுடன்
முட்செடியிலும் படபடக்கும் சுதந்திரம்!
கவிஞரை கேள்விக்குறியாக்காமல்
வளையாதுநிற்கும் வியப்புக்குறியாய்
நிமிர வைக்கும் இன்னொரு பிரம்மா!
🌹🌹வத்சலா🌹🌹