மீண்டும் அச்சுறுத்தல் - கிராத்தூரான் கவிதை

வேண்டும் நிம்மதி என்றே நிற்கையில்
மீண்டும் புதிதாய் அச்சுறுத்தல் தருகிறதா?
தாண்டிவிட்டோம் ஆபத்தையென நம்பிக்கை கொள்கையில்
ஆண்டியாய் மாற்றாமல் விடமாட்டேன் என்கிறதா?

தடைகளைக் கடந்தும் தடுப்பூசி கண்டும்
விடைபெறு என்றால் விலகாது நிற்கிறதா?
விடமாட்டோம் நாங்களும் உன்னாட்டம் தொடர
உருமாற்றம் கண்டாலும் தீநுண்மியே புரிகிறதா?

அஞ்சியே நடுங்குவதும் ஐயோவெனப் பதறுவதும் 
இனியிங்கு நடவாது எங்களது சபதமிது
நோயெதிற்பு சக்தியை உடம்புக்குள் கூட்டிவிட்டோம்
நிச்சயம் உனையெதிற்போம் உறுதியின் முழக்கமிது.

*கிராத்தூரான்*