தேர் - பொன்.ரவீந்திரன்

எப்பொழுதில்
புறப்பட்டாலும்
திரும்பிவிடும்
கோயிலின்தேர்...!
எந்நாளில்
கிளம்பிடினும்
வீடுதிரும்பாது
திருவாச்சித்தேர்..!
முன்னதில்
தாண்டவமாடும்
மகிழ்ச்சியால்...!பின்னதில்
கண்ணீரோடும்
துயரத்தால்...!
எல்லாத்தேர்களையும்
கடந்தபடிதானிருக்கிறது
தனக்கானதொருதேரில்
காலம்...!
*பொன்.இரவீந்திரன்*