க என்ற எழுத்தில் எழுச்சி பெறும் நீ
அனைவரின் மனதையும் மயக்க மலர உருக வைக்கும்
கள்ளச் சிரிப்பழகிக் கள்ளி நீ
வி என்ற எழுத்தில் வினோதமாய் தொடரும் நீ
பெரும் வித்தகியாய் உருவெடுக்கும் வில்லி நீ ,
தை மகளாய் நிறைவு பெறும் நீ,
அனைவரின் உள்ளத்தையும் பண்படுத்தி உற்சாகப்படுத்தி
கண்ணீர் மல்கசெய்யும் பெரிய தையல்காரி நீ,
விழா எடுத்தோம் உனக்கு,
என்றும் புத்துணர்ச்சி பெறுவாய் கள்ளியாய்,வில்லியாய்,தையல்காரியாய்.
அன்புடன்
கவி பிரியை மாலா செட்டிநாயக்கன்பட்டி.