என் தனிமையின்
அமைதியில்
மனதில்...!
பேரிரைச்சலாய்
உன் மௌனம்
சத்தமின்றி
யுத்தம் செய்கிறது..!
என்
தனிமையை
தவிர்ப்பதா..!
அல்லது
உன்
மௌனத்தை
கலைப்பதா..!
புரியாமல்
புலம்புகிறேன்..
புலம்
பெயர்ந்துவிட்ட
மகிழ்ச்சியே...!!
உன்
முகவரியைச்
சொல்..!!
நீ
வியாழனில்
வசித்தாலும்
விரைந்து
வந்து
விடுகிறேன்..!
*யுத்தத்தின்*
*இறைச்சல்*
*இடியாக*
*இறங்கிவிடும்*
*இம்சை*..!
இதயத்தில்
இன்னும் ஏதாவது
செய்துவிடுமுன்
மகிழ்ச்சியே
உன் முகவரியை
சொல்லி விடு..!
✍️கவிரசிகை...
...சுகந்தீனா